இலங்கையில் நீரில் மூழ்கி 122 பேர் பலி ; பொலிஸாரின் எச்சரிக்கை
2026ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் இலங்கையில் நீரில் மூழ்கி 122 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்களும் 09 பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

பெற்றோர்கள் அவதானம்
மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டில் 510 ஆண்கள் மற்றும் 85 பெண்கள் உட்பட 595 உயிரிழப்புகளும், 2025ஆம் ஆண்டில் 309 ஆண்கள் மற்றும் 67 பெண்கள் உட்பட 376 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கியதால் மொத்தம் 1,093 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.
எனவே, விடுமுறை நாட்களிலும், குறிப்பாக பண்டிகைக் காலத்திலும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லும் பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் குறித்துத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.