வவுனியாவில் பரபரப்பு... ஆபத்தான வகையில் காரை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய இளைஞன்!
வவுனியாவில் ஆபத்தான வகையில் காரைச் செலுத்தி விபத்துக்களை ஏற்ப்படுத்திய கார் சாரதியை இளைஞர்கள் விரட்டிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (28-08-2024) மாலை வவுனியா நகர பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கூமாங்குளம் பகுதியிலிருந்து காரை செலுத்தி வந்த இளைஞர் ஒருவர் உக்கிளாங்குளம் பகுதியில் விபத்து ஒன்றை ஏற்ப்படுத்திவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது வைரவபுளியங்குளம், மற்றும் நகரப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஏனைய வாகனங்களுடனும் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து குறித்த காரை இளைஞர்கள் சிலர் விரட்டிச் சென்றுள்ளனர்.
அதிவேகமாக பயணித்த கார் பூந்தோட்டம், பெரியார்குளம் பகுதியில் வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி நின்றது.
காரின் சாரதியை மடக்கிப் பிடித்த இளைஞர்கள், அவரை நையப்புடைத்ததுடன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.