காலி மீட்டியாகொட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இளைஞன் கைது
காலி மீட்டியாகொட பகுதியில் ஒருவரை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில், தலவாக்கலையில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலவாக்கலை - லிந்துலை பகுதியை சேர்ந்த 31 வயது இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றச் செயலுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் அக்கரபத்தனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மீட்டியாகொட பகுதியில் நேற்று முன்தினம் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
எனினும், தாக்குதலுக்குப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் T-56 ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் அன்றைய தினமே கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.