யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதி
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி ஒருவர் நேற்றையதினம் (05) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மன்னார் – பண்டிவிரிச்சான் மேற்கு, மடு பகுதியைச் சேர்ந்த மேரி எமில்தா விக்கிரமரட்ன (வயது 27) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
ஆடையில் தீப்பற்றி தீவிபத்து
குறித்த யுவதி கடந்த மாதம் 12 அன்று குளிர்காய்வதற்காக அடுப்பினை பற்றவைத்தபோது அவரது ஆடையில் தீப்பற்றி தீவிபத்துக்கு உள்ளாகினார்.
இந்நிலையில் அன்றையதினமே பண்டிவிரிச்சான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதன்பின்னர் 13ஆம் திகதி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமாலை (6) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.