வெளிநாட்டிலிருந்து வந்த இளம் வர்த்தகர் கைது ; பயணப்பொதியில் காத்திருந்த ஷாக்
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் இளம் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் நேற்று (30) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.

இளம் வர்த்தகர்
சந்தேக நபரான இளம் வர்த்தகர் டுபாயில் இருந்து நேற்றைய தினம் அதிகாலை 06.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்
இதன்போது விமான நிலைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான இளம் வர்த்தகர் கொண்டு வந்த பயணப்பொதிகளில் இருந்து ஐபோன்கள் 32 , மடிக்கணினிகள் 03, தங்க மாலைகள் 04, தங்க வளையல்கள் 04, தங்க காதணிகள் 03 ஜோடிகள், தங்க பெண்டன்கள் 08, தங்க மோதிரம் 01 மற்றும் டேப் கணினிகள் 04 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.