நடுவீதியில் பரிதாபமாக உயிரிழந்த இளம் ஆசிரியை
மதுகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான இளம் யுவதி ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதி மத்துகம ஓவிட்டிகல மகா வித்தியாலயத்தின் ஆசிரியையான லக்மாலி உதேஷிகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை மத்துகமவிலிருந்து அளுத்கம நோக்கி ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வெலிபன்ன சந்தியில் இருந்து திடீரென பிரதான விதிக்கு பிரவேசித்த கப் வாகனத்தில் மோதுண்ட நிலையில் பிரதான வீதிக்கு தூக்கி எறியப்பட்டுள்ளார்.
இதன்போது எதிர்த்திசையில் பயணித்த சிறிய ரக லொறி ஒன்றில் யுவதி மோதுண்டு சம்பவ இடத்திலேயே ஆசிரியை உயிரிழந்துள்ளார்.
விபத்தையடுத்து கப் வாகன சாரதி தப்பியோடிய நிலையில், வெலிபன்ன பொலிஸாரினால் இரண்டு வாகனங்களினதும் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த ஆசிரியையின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது2டன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.