திருகோணமலையில் சிசுவின் மரணத்தை மறைத்த பெற்றோர்: காரணம் என்ன?
திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் முத்து நகர் பகுதியில் இன்று (11) அன்று இடம்பெற்றுள்ளது. குழந்தை பிறந்து 42 நாட்கள் எனவும் இரவு குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு படுக்கை அறையில் உறங்கிக் கொண்டு இருந்த தாய் இன்று (11) அதிகாலை சிசுவை பார்த்த போது உயிரிழந்த நிலையில் குழந்தை இருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

சிசுவுக்கு எக்கோ பரிசோதனை
ஆனாலும் உயிரிழந்த சிசுவின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய முற்பட்டபோது அதனை மீட்ட சீனக்குடா பொலிஸார் சிசுவின் ஜனாஸாவை திருகோணமலை பொது வைத்திய சாலையின் சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்காக ஒப்படைத்துள்ளது.
சிசுவை எக்கோ பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி கொண்டு வருமாறு மருத்துவர்கள் தமக்கு கூறியிருந்தாக பெற்றோர்கள் பொலிஸாரிடம் விசாரணையின் போது கூறியுள்ளனர்.
எனினும் சிசுவின் மரணம் தொடர்பில் விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.