மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன்
இந்தியவில் வேலூர் மாவட்டத்தில் தம்பி போல் பழகிய நபர் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் 31 வயதான மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு காது கேளாமலும், வாய் பேச முடியாமலும் இருந்துள்ளது. இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வெளியே சென்ற பெண்ணின் பெற்றோர், இரவு வீடு திரும்பியபோது, தனது மகள் சோர்வாக இருப்பதை கண்டு அவரிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது வாய் பேச முடியாத அவர், அழுது கொண்டே தனக்கு நேர்ந்த கொடுமைகளை சைகை மொழியில் விவரித்துள்ளார்.
அதன்படி, அந்த பெண்ணின் பெற்றோர், அவர்களது உறவினரின் மகன் விஷால் (21) என்பவரின் பெற்றோர் சிறு வயதிலே இறந்து விட்டதால் இவர்கள் தங்கள் சொந்த மகன் போல் வளர்த்து வந்துள்ளனர்.
அவ்வாறு இருக்கையில், இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது மாற்றுத்திறனாளி பெண்ணிடம் குறித்த இளைஞன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாா். நடந்த சம்பவத்தை மாற்றுத்திறனாளி பெண் பெற்றோரிடம் சைகை மொழியில் தெரிவித்துள்ளாா்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து அந்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.