20 ரூபாவுக்கு ஐஸ்கிரீம் வாங்கி 84 ஆயிரத்தை திருடிச்சென்ற இளைஞன்!
இருபது ரூபாய்க்கு ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கி விட்டு அங்கிருந்த 84,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தை இளைஞன் ஒருவன் திருடிச் சென்றுள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் வாழைச்சேனையில் உள்ள செம்மண்ணோடை பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
வர்த்தக நிலையத்தில் ஐஸ்கிரீம் வாங்கி விட்டு குறித்த இளைஞன் கடைக்கு அருகில் நின்றுள்ளான் இதை அவதானிக்காத கடையில் இருந்த பெண்மணி கடைக்கு பின்னாலுள்ள அறைக்குள் சென்றுள்ளார்.
பெண்மணி செல்வதை அவதானித்த குறித்த இளைஞன் கடைக்குள் புகுந்து அங்கிருந்த 84,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தை திருடிச் சென்றுள்ளான். இச்சம்பவம் வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது