தமிழர்கள் வாழும் பகுதியில் பரபரப்பு சம்பவம்: நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் சடலம்!
நுவரெலியா மாவட்டம் - தலவாக்கலை மேல் கொத்மலா நீர்த்தேக்கத்தில் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றையதினம் (29-02--2024) மாலை இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை ரயில் சாலையில் உள்ள இரண்டு பாலங்களுக்கும் நீர்த்தேக்கத்தின் குறுக்கே நெடுஞ்சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் குறித்த சடலம் மிதந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா நீதவான் வந்து சம்பவ இடத்தில் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.