ஆபாச காணொளிகளை பாடசாலை மாணவர்களுக்கு அனுப்பி வலையில் சிக்கி வைத்த இளம்பெண்!
அமெரிக்காவில் 23 வயது இளம்பெண் ஒருவர் தன்னை 14 வயது சிறுமி என கூறி பாடசாலை மாணவர்கள் பலரை பாலியல் விருப்பத்திற்கு பயன்படுத்தி கொண்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியின்படி,
அலைசா ஆன் ஜிங்கர் என்ற இளம்பெண் பாலியல் விருப்பத்துடன் சிறுவன் ஒருவனை அணுகியுள்ளார்.
அவனை சந்தித்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட விரும்பி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இதுபற்றிய தகவலறிந்து, தம்பா பொலிஸார் ஜிங்கரை கைது செய்துள்ளனர்.
இதன்பின்னர் நடந்த விடயங்கள் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளன. ஜிங்கர் கைதுக்கு பின், 4 சிறுவர்கள் இதேபோன்று நாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளோம் என கூறி வந்தது பொலிஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதற்கு முன் கடந்த ஆண்டு நவம்பரில், மாணவர் ஒருவனிடம் 30 பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக ஜிங்கர் கைது செய்யப்பட்டார்.
பல மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளையும் அப்போது அனுப்பியிருக்கிறார். அவர், தன்னை 14 வயது சிறுமி என கூறி கொண்டு பாடசாலை மாணவர்களை தன்னுடைய வலையில் சிக்க வைத்துள்ளார்.
இதன்பின்னர் பல்வேறு மாணவர்களுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார். இதுபோல், தன்னிடம் சிக்கிய முதல் சிறுவனிடம் எண்ணற்ற முறை பாலியல் உறவை கொண்டிருக்கிறார்.
சமூக வலைதள செயலில் ஒன்றின் ஊடாக வழியே ஆபாச காணொளி ஒன்றை பல மாணவர்களுக்கு அனுப்பி அவர்களையும் ஈர்க்க பார்த்திருக்கிறார்.
அந்த முதல் சிறுவனுக்கு 12 முதல் 15 வயது இருக்கும் என கைது அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள்.
மேலும், சிறுவர்களை கவர்ந்திழுத்தது மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது என 11 குற்றச்சாட்டுகளை அலைசா ஜிங்கர் எதிர்கொண்டிருக்கிறார்.
இதேவேளை, கடந்த வெள்ளி கிழமை கோர்ட்டில் முதன்முறையாக ஜிங்கர் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.