வவுனியாவில் பயங்கர விபத்து சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த 21 வயது இளைஞன்!
வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் செட்டிக்குளம், வாழவைத்த குளம் பகுதியில் நேற்றிரவு (06-04-2024) இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாழவைத்த குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 21 வயது மதிக்கத்தக்க அல்முதீன் மிஹ்ராஜ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.