உழவு இயந்திரத்தால் பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர் ; தமிழர் பகுதியொன்றில் சம்பவம்
உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - கொழும்பு வீதி, பொத்தானை சந்தியில் இன்று (7) இடம்பெற்றுள்ளது.
இளம் குடும்பஸ்தர்
வேளாண்மை அறுவடை செய்யும் உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற காவத்தமுனை பனிச்சையடி வீதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
அவருடன் பயணித்த மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் உடல் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.