தமிழர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்து; ஒருவர் உயிரிழப்பு; நொருங்கிய கார்
திருகோணமலை மூதூர் பச்சநூர் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்லதாக தெரிவிக்கப்படுகின்றது.
கார் மற்றும் டிப்பர் மோதி விபத்து ஏற்பட்டதில் காரில் பயணித்த தோப்பூரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேருக்குநேர் மோதிய வாகனங்கள்
இந்த விபத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் காரில் பயணித்த தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் உயிரிழந்துள்ளதுடன் விபத்தில் படுகாயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.
விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் பயணித்தவர்கள் தோப்பூரிலிந்து மன்னாருக்கு வேலை நிமித்தமாக சென்று கொண்டிருந்தபோது எதிர்த்திசையில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் நேருக்குநேர் மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்தி காருக்கு பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.