வெயில் காலத்திற்கு இப்படியொரு ஜூஸ் குடிச்சிருக்கவே மாட்டீங்க
கேரட், பீட்ரூட், தேங்காய், கொத்தமல்லி, இஞ்சி, எலுமிச்சை ஆகியவை எவ்வளவு ஆரோக்கியமானவை என்பது நமக்குத் தெரியும். இந்த பொருள்கள் அனைத்தையும் பயன்படுத்தி ஒரு சுவையான ஜூஸ் செய்து வெயிலில் வயிறையும் உடலையும் குளுகுளுனு வெச்சிக்கலாம்.
கேரட்
கேரட் கோடைகாலத்துக்கு ஏற்ற சிறந்த காய் என்று சொல்லலாம். இதில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஏ மற்றும் நிறைய ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்து இருக்கின்றன. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தோடு நீர்ச்சத்தையும் கொடுக்கும். உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். ஜீரண ஆற்றலை மேம்படுத்தவும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவி செய்யும்.
பீட்ரூட்
பீட்ரூட்டை சேர்த்துக் கொள்வது குளிர்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும் ஹைட்ரேட்டிங்காகவும் வைத்துக் கொள்ளச் செய்யும் அற்புதமான வழி. குறிப்பாக சருமத்தில் ஏற்படும் வறட்சியைக் குறைக்கும். இதிலுள்ள கால்சியம் மற்றும் இரும்புச்சத்து எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்யும். இதிலுள்ள பாஸ்பரஸ் முடி வளர்ச்சியைத் தூண்டும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும்.
தேங்காய்
கோடை காலத்தில் தேங்காய் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுப்பதோடு உடலுக்குத் தேவையான எனர்ஜியும் ஆற்றலும் கொடுக்கும். தேங்காயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். உடலல் சூட்டையும் தணிக்கும்.
எலுமிச்சை
கோடை காலம் வந்துவிட்டாலே நம் வீட்டில் எலுமிச்சை பழங்கள் கட்டயமாக இருக்கும். இது உடல்சூட்டைத் தணித்து குளிர்ச்சியாகவும் புத்துணர்வோடும் வைத்திருக்க உதவி செய்யும். இதிலுள்ள வைட்டமின் சி வயிறு ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்க உதவும். நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும்.