பொலிஸ் உத்தியோகத்தர் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண்
தம்மை பொலிஸ் உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் பொரளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 வயதுடைய அப் பெண் கல்கிஸ்ஸை பகுதியிலுள்ள தனியார் காப்புறுதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்ததாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விசாரணையில் வெளிவந்த தகவல்
மொரட்டுவை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அப் பெண் முறைப்பாட்டாளர்களிடம் இரண்டு சந்தர்ப்பங்களில் பணத்தை பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் சந்தேகநபரான பெண் போலி அடையாள அட்டை மற்றும் காவல்துறை தலைமையகத்தின் முகவரியில் தயாரிக்கப்பட்ட போலி ஆவணம் என்பவற்றின் படங்களை வாட்ஸ்அப் மூலம் முறைப்பாட்டாளர்களுக்கு அனுப்பியுள்ளமையும் தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.