குளிர்காலத்தில் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டிய 4 முக்கிய உணவு பொருட்கள்
சந்தையில் சில பழங்கள் மற்றும் காய்கறிகள் மலிவான விலையில் கிடைக்க கூடும், மேலும் அவை குணத்தில் மிகவும் சிறந்தயாகவும் இருக்கும். குளிர்காலத்தில் இவற்றை உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குளிர்காலம் கடுமையான குளிர்ச்சியை அளிக்கிறது.
மேலும், குளிரில் இருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள நெருப்பு மற்றும் சூடான ஆடைகளை போடுகின்றனர். ஆனால் இந்தக் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, சூடான ஆடைகள் மட்டுமல்ல, சில சூடான பொருட்களையும் உட்கொள்ள வேண்டும்.
இதையடுத்து, குளிர்காலத்தில் இந்த 4 பொருட்களை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். இவற்றை தொடர்ந்து உண்டு வந்தால், உடல் உள்ளே இருந்து சூடாக இருக்கும், குளிர்கால நோய்கள் அண்டாது.
மேலும், குளிர் காலத்தில் நாம் உடலில் உள்ள வெப்ப உணர்வைத் தக்க வைத்துக் கொள்ள, மக்கள் பல்வேறு வகையான உலர் பழங்கள் மற்றும் வெப்பம் கொடுக்கும் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உட்கொள்ளலாம்.
கண்டிப்பாக உட்கொள்ள வேண்டிய 4 பொருட்கள் :
பேரிச்சம்பழம் உட்கொள்ள வேண்டும் : அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பேரிச்சம்பழம் உடலுக்கு சூடு தருவதுடன், எலும்புகளை வலுப்படுத்தவும், ரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்யவும் உதவுகிறது. இதனை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
குளிர்காலத்தில் இஞ்சி நன்மை தரும்: தேநீரில் இஞ்சி சேர்த்து குடிக்கும் வழக்கம் மிகவும் நல்லது. இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து பானமாக அருந்தலாம். காய்கறிகள், சாலடுகள், என அனைத்திலும் கலந்து பயன்படுத்தலாம். இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது, இது உடலுக்கு வெப்பத்தைத் தருவது மட்டுமின்றி, மேலும் பல நன்மைகளை வழங்குகிறது.
சூடு கொடுக்கும் பூண்டு : உடலுக்கு பூண்டு சூடு கொடுக்கும் உணவுப்பொருள் ஆகும். குளிர்காலத்தில் பூண்டை நறுக்கி உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் சூடாக இருக்கும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் பூண்டு உதவுகிறது.
சிவப்பு மிளகாய் சாப்பிட வேண்டும் : சிவப்பு மிளகாய் மிகவும் சூடாக இருக்கும், பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது. ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மிளகாய், குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க உதவும். இரத்த உறைவு ஏற்படுவதையும் தடுக்க மிளகாய் உதவுகிறது.