எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமா?
இலங்கையில் தற்போதைய ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக மூடப்பட்டுள்ள சில பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் நடத்தப்படும் முறை குறித்து நாளை (24-06-2022) மாகாண மட்டத்தில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் பின்னர், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.
நேற்றைய தினம் (22-06-2022) பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை 65 வீதமாக பதிவாகியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.