ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பரீட்சை அட்டவணைகள் குறித்து வெளியான தகவல்
திட்டமிட்டபடி பாடசாலை மாணவர்களுக்குரிய அனைத்து பரீட்சைகளும் இடம்பெறும் என பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.
உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
விடுமுறைக்கு முன்னதாக சுமார் நான்கு பாடசாலை நாட்கள் இழக்கப்பட்ட போதிலும், அது பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என அமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்வித்துறையானது தேசிய சக்திக் கொள்கைகளுக்கு (National Energy Policies) ஏற்ப தனது செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், தற்போதைய சூழல் பரீட்சைகளைத் தாமதப்படுத்தும் அளவுக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பரீட்சை அட்டவணைகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமைச்சு நெகிழ்வுத்தன்மையுடன் செயற்படும் போதிலும், தற்போதைக்கு பழைய திட்டமே நடைமுறையில் இருக்கும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.