விருந்தகம் ஒன்றின் வரவேற்பறைக்குள் அழையா விருந்தாளி; ஆனால் நடந்தது வேறு!
மாத்தளை கண்டலம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றின் வரவேற்பறைக்குள் காட்டு யானை ஒன்று அமைதியாக நுழைந்து உலாவந்த சம்பவம் விருந்தினர்களையும் ஊழியர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
காட்டு யானை ஒன்று விருந்தக வளாகத்திற்குள் அமைதியாக நடந்து வரும் காட்சிகளை ஊழியர் ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.

அமைதியான முறையில் வரவேற்பறையைக் கடந்து சென்ற யானை
எவ்வித பதற்றத்தையும் ஏற்படுத்தாமலும், குறித்த விருந்தகத்தின் தளபாடங்கள் மற்றும் பிற பொருட்களைச் சேதப்படுத்தாமலும் அந்த யானை மிக அமைதியான முறையில் வரவேற்பறையைக் கடந்து சென்றுள்ளது.
அத்துடன், ஊழியர்களுக்கோ அல்லது விருந்தினர்களுக்கோ எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல், அந்த யானை தானாகவே விருந்தக வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளது.
விருந்தகம் ஒன்றுக்குள் காட்டு யானை உலா வந்த இந்த அபூர்வ நிகழ்வு தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.