கணவருக்கு தெரியாது மனைவி செய்த செயல்; காட்டிக்கொடுத்த கிளி!
காலி - கரந்தெனிய எகொடவெல பிரதேசத்த்தில் வீடொன்றில் 10 இலட்சம் ரூபாய் பணமும், நான்கரை இலட்சம் பெறுமதியான தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்ட நிலையில், அந்த வீட்டில் இருந்த கிளியால் வீட்டின் எஜமானியின் குட்டு வெளிப்பட்டுள்ளது.
வீட்டில் களவு போனதாக கணவன் முறைப்பாடு அளித்த நிலையில் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
நகை மற்றும் பணத்தை திருடிய மனைவி
விசாரணையில் காணாமல் போன பணமும், நகைகளின் அடகு வைக்கப்பட்ட ரசீதுகளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முறைப்பாட்டாளர் காணி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக வைத்திருந்த பணமும், நகையும் திருடு போய்விட்டதாக முறைப்பாட்டளரின் மனைவி கணவரிடம் கூறியுள்ளார்.
அத்துடன் அது தொடர்பில் கரந்தெனிய பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறும் மனைவி கணவருக்குத் கூறியுள்ளார். கணவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் போன தங்க நகைகள் வீட்டின் அறையொன்றிலிருந்த அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாக முறைப்பாட்டாளர் பொலிஸில் தெரிவித்திருந்தார்.
அதோடு அந்த அறைக்கு தாம் வளர்க்கும் கிளியைத் தவிர வெளிநபர்கள் யாரும் வர முடியாது எனவும் கூறியிருந்தார். அதோடு நகைகள் வைக்கப்பட்டிருந்த அறையின் திரைச்சீலையில் கிளி அமர்ந்திருப்பது வழக்கம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பொலிஸாராரை ஏமாற்ற வீசப்பட்ட மிளகாய்த்தூள்
அதுமட்டுமல்லாது அந்த அறிக்குள் வெளிநபர் யாரும் அந்த அறைக்குள் நுழைந்தால் கிளி கீச்சிடும் எனவும், கணவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், வீட்டு பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் பெண் முரண்பாடான பதில்களை வழங்கியதால் பெண்ணின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அதன் பின்னர் அந்த பெண்ணே பணத்தையும் நகையையும் திருடியமை தெரியவந்துள்ளது.
அதோடு காணாமல் போன பணம் வைக்கப்பட்டிருந்த பணப்பையை வீட்டின் குளியலறையிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதோடு பணமும் நகையும் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஆங்காங்கே மிளகாய்த் தூள் வீசப்படமையை அவதானித்த பொலிஸார், வீசப்பட்டிருந்த மிளகாய்த் தூளும், அந்த நபரின் வீட்டிலிருந்த மிளகாய்த் தூளும் ஒன்று எனக் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.