கோட்டாபயவின் ஆஸ்தான ஜோதிடர் ஞானாக்காவுக்கு 28 மில்லியன் வழங்கிய அரசாங்கம்!
அனுராதபுரத்தில் உள்ள தனது வழிபாட்டுத்தலம் அழிக்கப்பட்டதற்காக, கோட்டாபயவின் ஆஸ்தான ஜோதிடர் பிரபல மாந்திரீகர் ஞானாக்கா ரூ. 28 மில்லியன் இழப்பீடு பெற்றதாக தெரியவந்துள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஆட்டியில் இருந்து விரட்டப்பட்டு, ஜனாதிபதியாக ரணில் ஜனாதிபதியாக பதவி வகித்த போதும் தமது விசுவாசிகளிற்கு ராஜபக்சக்கள் பணத்தை அள்ளிவீசியமை அம்பலமாகியே வருகின்றது.
வழிபாட்டுத்தலம் அழிக்கப்பட்டதற்காக இழப்பீடு
அதன்படி 2022 ஆம் ஆண்டில் மக்கள் போராட்டத்தின் போது வீடுகள் அழிக்கப்பட்ட அரசியல்வாதிகள் அல்லாத தனிநபர்களுக்கான இழப்பீடாக முந்தைய அரசாங்கம் மேலும் 1,125 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்தொகை அரசியல்வாதிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட ரூ.1,221 மில்லியனுக்கு மேலதிகமானதாகும் என்றும் தெரியவந்துள்ளது.
அதோடு அனுராதபுரத்தில் உள்ள தனது வழிபாட்டுத்தலம் அழிக்கப்பட்டதற்காக பிரபல மாந்திரீகர் ஞானாக்கா ரூ. 28 மில்லியன் இழப்பீடு பெற்றதாக தெரியவந்துள்ளது.
கோத்தபாய ராஜபக்சவின் ஆசை மாந்தீரிகரான ஞானாக்காவின் வீடும் வழிபாட்டு தலமும் போராட்டகாரர்களினால் தீக்கிரையாக்கப்பட்டது.
சம்பவத்தை அடுத்து ஞானக்கா தலைமறைவாகியிருந்ததுடன் கோத்தபாய ராஜபக்சவும் நாட்டை விட்டு அக்காலப்பகுதியில் தப்பியோடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.