நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச எங்கே? வரச்சொல்லுங்கள்!
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபைக்கு வருவது இல்லை. அவர்தான் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் என எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார் .
அதோடு பசிலுக்கு பதிலாக வேறு உறுப்பினர்கள் பதில் கூறி வருகின்றதாக தெரிவித்த கிரியெல்ல, நிதி அமைச்சரைச் சபைக்கு வரச் சொல்லுங்கள். இல்லையென்றால் சபாநாயகர் நிதி அமைச்சருக்குக் கட்டளை அனுப்புங்கள் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், கோரிக்கை விடுத்தார்.
நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்ற தாகவும், டிசம்பர் 10ஆம் திகதியே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபையில் உரையாற்றினார்.
அதன்பின்னர் நாட்டின் நிதி நிலைவரம் தொடர்பில் கடந்த மூன்று மாதங்களாக நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
எனவே, நிதி அமைச்சர் பசில் நாடாளுமன்றம் வந்து தெளிவுபடுத்துமாறு, பசிலுக்கு சபாநாயகர் உத்தரவிடவேண்டும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார்.