உலகத்தை உலுக்கும் எப்ஸ்டீன் கோப்புகள் ; இலங்கையில் காணாமல் போன சிறுவர்களுக்கு என்ன நடந்தது?
உலகளவில் எப்ஸ்டீன் கோப்புகள் பேசுபொருளாகியுள்ள நிலையில், இலங்கையில் காணாமல் போன சிறுவர் சிறுமியர்களை அரசியல் சார்ந்து மட்டுதான் கடத்தியுள்ளார்கள் என்ற நிலைக்கு வர முடியாது என்று சட்டத்தரணி உமாகரன் ராசையா தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று(8) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பாலியல் செயற்பாடுகளுக்காக சிறுவர் சிறுமியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று எப்ஸ்டீன் கோப்புகள் உலகளவில் ஒரு விடயத்தை எமக்கு குறிப்பிட்டுள்ளது.

அப்படியிருக்கையில் இலங்கையிலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசியல் சார் குற்றமாக காணாமல் ஆக்கப்படுதல் என்ற ரீதியில் மட்டும் விசாரிக்க முடியாது.
2009- 2026 ஆம் ஆண்டு வரையிலாள காலபப்பகுதியில் காணாமலாக்கப்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கு என்ன நடந்தது என்பதை பாலியல் சுரண்டல் ரீதியாகவும், மனித ஆட்கடத்தல் ரீதியாகவும் இந்த அரசு விசாரணை செய்ததா? இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைய தேசியமக்கள் சக்தியாக இருக்ககூடிய ஜேவிபியினரும் தான்.
எனவே மிகப்பெரிய பொறுப்பும் கடப்பாடும் இவர்களுக்கும் உள்ளது. எனவே இந்த கடத்தல் விவகாரங்களை பாலியல் சுரண்டல் மற்றும் நரபலியிடுதல் போன்ற மூடநம்பிக்கைகள் விடயத்திலும் அவயங்களுக்காக சிறுவர் சிறுமியர்கள் கடத்தப்பட்டார்கள் என்ற ரீதியிலும் விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

இதுவரையில் எத்தனை சிறுவர் சிறுமியர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதற்கான சரியான பதிவுகள் இல்லை.
காணாமல் போன் 23000 பேரில் 2300 சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்று எம்மால் கூற முடியும், அதனை மறுக்க என்பிபி அரசாங்கம் தகுந்த சாட்சியங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சிறுவர்கள் வணிகபொருளாக்கப்பட்டுள்ளார்கள். எனவே இது தொடர்பில் பல இடங்களுக்கு கடிதங்களை அனுப்பவுள்ளோம். எப்ஸ்டீன் கோப்புகளில் 188 இடங்களில் இலங்கையின் பெயர் உள்ள நிலையில், அது குற்றசம்பவத்துடன் தொடர்புடையது என்று எம்மால் எவ்வாறு கூற முடியாதோ தொடர்பில்லையென்றும் கூற முடியாது என்று குறிப்பிட்டார்.