யாழ். வைத்தியசாலை தொடர்பில் கடந்த கால குற்றங்களை கூறாது விரைவாக இயங்க வைக்க வைத்தியர்கள் முன்வருவார்களா?

Jaffna Jaffna Teaching Hospital Crime
By Sahana Jul 12, 2024 01:07 AM GMT
Sahana

Sahana

Report

யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலையை காப்பாற்ற வெளிநாட்டில் வசிக்கும் தென்மராட்சியை சேர்ந்த வைத்தியர்கள் முன்வரவேண்டும் சாவகச்சேரி வைத்தியசாலை ஏன் அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பதைப் பற்றி கடந்த காலத்தில் சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரிவின் சிரேஷ்ட மருத்துவ நிபுணராக கடமை ஆற்றியவர் என்ற வகையில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.

வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி


இரு தசாப்தங்களுக்கு முன்னரேயே சாவகச்சேரி வைத்தியசாலை ஆதார வைத்தியசாலை வகை b என அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது. வகை பி அடிப்படை வசதிகள் இணைக்கப்பட்ட அட்டவணையில் காணப்படுகின்றன.

யாழ். வைத்தியசாலை தொடர்பில் கடந்த கால குற்றங்களை கூறாது விரைவாக இயங்க வைக்க வைத்தியர்கள் முன்வருவார்களா? | What Is The Use Of Accusing Savagacheri Hospital

இதில் குறிப்பிட்டுள்ள வசதிகளில் முக்கியமாக சத்திரசிகிச்சை கூடம் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர் என்பன சாவகச்சேரி வைத்தியசாலையில் காணப்படவில்லை என்பது முக்கியமான குறைபாடாக உள்ளது.

எவ்வாறு இந்த இந்நிலை ஏற்பட்டது என்று ஆராய்ந்தால் 2009 வரை போர் நடக்கும் காலத்தில் வட பகுதி வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படாமல் இருந்தன என்பது வெளிப்படை.

யாழ். வைத்தியசாலை தொடர்பில் கடந்த கால குற்றங்களை கூறாது விரைவாக இயங்க வைக்க வைத்தியர்கள் முன்வருவார்களா? | What Is The Use Of Accusing Savagacheri Hospital

அதன் பிறகு பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திக்குரிய அழுத்தங்களை பிரயோகிக்காததால் 2010-2018 வரை மந்த கதியில் அபிவிருத்தி இடம் பெற்றது.

இப்போது தேர்தல் காலம் நெருங்கி விட்டதால் அனைத்து அரசியல்வாதிகளும் வாக்குகளுக்காக சாவகச்சேரி வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதாக சீன் போடுகிறார்கள்.

இவர்களில் சிலர் கடந்த காலத்தில் வைத்தியர்களிடம் கப்பம் கேட்டு அவர்களை நாட்டை விட்டு கலைத்தவர்கள் எனப்து பலருக்கு தெரியாமல் இருக்கலாம். 2019 கோவிட் அதை தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார வங்குரோத்து ஆகியவற்றால் இலங்கை பூராகவும் வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தாமதப்பட்டு இருந்தது.

யாழ். வைத்தியசாலை தொடர்பில் கடந்த கால குற்றங்களை கூறாது விரைவாக இயங்க வைக்க வைத்தியர்கள் முன்வருவார்களா? | What Is The Use Of Accusing Savagacheri Hospital

பின்னர் வந்த ரணில் அரசாங்கம் பொருளாதார நிலையில் இருந்து நாட்டை மீட்டதாக உரிமை கோரினாலும் அதிகரித்த வரிகளை விதித்து வைத்தியர்களையும் நிபுணர்களையும் நாட்டை விட்டு ஆயிரக்கணக்கில் வெளியேறும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலையில் ஒவ்வொரு நாளும் .குறைந்தது ஒரு மருத்துவ நிபுணரும் சராசரியாக 3 மருத்துவர்களும் நாட்டை விட்டு வெளியேறுவதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

குறிப்பாக பெருமளவு சத்திரசிகிச்சை நிபுணர்கள் வெளியேறியுள்ள நிலையில் பெரிய வைத்தியசாலைகளே சத்திரசிகிச்சை நிபுணர்கள் தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மைக்காலத்தில் சாவகச்சேரிக்கு சத்திரசிகிச்சை நிபுணர்களை நியமிப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது.

யாழ். வைத்தியசாலை தொடர்பில் கடந்த கால குற்றங்களை கூறாது விரைவாக இயங்க வைக்க வைத்தியர்கள் முன்வருவார்களா? | What Is The Use Of Accusing Savagacheri Hospital

தென்மராட்சியை சேர்ந்த பல வைத்தியர்களும் வைத்திய நிபுணர்களும் வெளிநாட்டில் வசதியாக இருந்துகொண்டு நாங்கள் 5 பவுண் அனுப்பினோம் 10 டொலர் அனுப்பினோம் ஏன் இன்னமும் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யவில்லை என்று சமூக ஊடகங்களில் கேட்பதை விடுத்து உங்களுடைய ஊர் வைத்தியசாலையில் சிறிது காலம் வேலை செய்யலாம் அல்லவா ? காலி முதலான தென் பகுதியில் வசிக்கும் வைத்தியர்களை கட்டாயப்படுத்தி சாவகச்சேரியில் வேலை செய்ய வைத்தால் அவர்களும் மனிதப் பிறவிகளாக வீட்டுக்கு போக துடிப்பார்கள் மேலும் சாவகச்சேரியின் அபிவிருத்தியில் அவர்களுக்கு ஆர்வம் இருக்காது.

எனவே இந்த இந்நிலை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு ஏற்பட்டதற்கு தென்மராட்சியில் இருந்து வெளியேறிய மருத்துவர்களும் ஒரு காரணம் என்பதை அவர்கள் நேர்மையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் குறிப்பாக இலங்கை பல்கலைக்கழகங்களில் இலவச மருத்துவ கல்வியை பயின்ற பின்னர் இப்போது வெளிநாடுகளில் வேலை செய்யும் தென்மராட்சியை சேர்ந்த மருத்துவர்களும் சத்திரசிகிச்சை நிபுணர்களும் சிறிது காலமாவது சாவகச்சேரியில் வேலை செய்ய முன்வரவேண்டும்.

யாழ். வைத்தியசாலை தொடர்பில் கடந்த கால குற்றங்களை கூறாது விரைவாக இயங்க வைக்க வைத்தியர்கள் முன்வருவார்களா? | What Is The Use Of Accusing Savagacheri Hospital

அதே நேரம் சமூக ஊடகங்களில் சீன் போடுவோரால் எந்த மாற்றமும் சாவகச்சேரியில் நிகழப்போவதில்லை. இவர்கள் பொழுதுபோக்குக்காக கமெண்ட்ஸ் போடுவார்கள் மற்றப்படி தமது youtube வியாபாரத்தை பெருக்குவார்களே தவிர உருப்படியான எதையும் செய்யப்போவது இல்லை.

இதைவிட மருத்துவர்களை குறை சொல்வோர் தமது பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிக் கொண்டு வைத்தியர்கள் மாத்திரம் இலங்கையில் இருக்க வேண்டும் என்று குதர்க்கம் பேசுவார்கள்.

எனது பணிவான கோரிக்கை ஒவ்வொரு தென்மராட்சியை சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்யும் வைத்தியரும் 6 மாதம் ஆவது சாவகச்சேரியில் வந்து வேலை செய்தால் தற்போதைய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையை அதற்குரிய வசதிகளுடன் விரைவாக இயங்க வைக்க முடியும்.

இதை விடுத்து கடந்த காலத்தில் என்ன நடந்தது என்று மற்றவர்களை குற்றம் சாட்டி கொண்டிருப்பதால் எந்த பலனும் கிடைக்க போவதில்லை. இந்த தியாகத்தை செய்ய முன்வருவார்களா ?  

அர்ச்சுனா தொடர்பில் வெளியான பிழையான தகவல் ; சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ

அர்ச்சுனா தொடர்பில் வெளியான பிழையான தகவல் ; சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

02 May, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு

30 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், Ammerzoden, Netherlands

27 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fjellhamar, Norway

01 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, கிளிநொச்சி, அரியாலை, Toronto, Canada

26 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், Bussy-Saint-Georges, France

25 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US