நமக்கு நாமே ஒரு பாதுகாப்பு வட்டத்தை போட்டுக்கொள்ள இந்த தாயத்தை கட்டிக்கொள்ளுங்கள்
சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்றால் நமக்கு நாமே ஒரு பாதுகாப்பு வட்டத்தை போட்டுக்கொள்ள வேண்டும்.
கண்ணுக்குத் தெரிந்த எதிரி, கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல் என்று இப்படி பல வகைப்பட்ட பிரச்சினையில் இருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டும்.
கெட்ட சக்தியிடம் இருந்து விடுபட கொத்தமல்லி வேர் தாயத்து:
ஒரு குழந்தை நன்றாக தான் படித்துக் கொண்டிருந்தது. இடையே ஏதோ ஒரு கெட்ட சேர்க்கை அவன் படிப்பை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டது அவனை மீண்டும் நன்றாக படிக்க வைக்க கெட்ட நபர்களின் சாவுகாசத்தில் இருந்து விடுபட வைக்க இந்த தாயத்தை கட்டிவிடலாம்.
சில குழந்தைகள் மிகவும் பயந்த சுபாவமாக இருக்கும். 12 மணி நேரத்தில் வெய்யிலில் சென்று வந்தால் உடனடியாக அந்த பிள்ளைக்கு ஏதாவது உடல் உபாதை ஏற்பட்டுவிடும். இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கும் இந்த பரிகாரம் செய்யலாம்.
ராஜ வசியம்
எங்கு சென்றாலும் ராஜ மரியாதை கிடைக்க வேண்டுமா. வாழ்வாங்கு வாழ இந்த தாயத்தை கழுத்தில் கட்டிக் கொள்ளலாம்.
நேரம் கெட்ட நேரத்தில் வீட்டிற்கு வரக்கூடிய சூழ்நிலை உங்களுக்கு இருக்குதா. முச்சந்தியில் 4 ரோடு சந்திக்கும் இடம், சுடுகாடு என்று பலவிதமான வழிகளைக் கடந்து நடு இரவில் வீட்டுக்கு வருபவர்களும் பாதுகாப்பிற்காக இந்த தாயத்தை கட்டிக் கொள்ளலாம்.
இப்படி சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் முதல் பெண்கள் வரை இந்த தாயத்தை கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். வேண்டாத விஷயங்கள் உங்களை நெருங்காது.
தாயத்தின் அற்புதம்
இதற்கு கொத்தமல்லி தழையின் வேர் தான் இந்த பரிகாரத்திற்கு தேவையான ஒன்றாக கருதப்படுகின்றது.
கொத்தமல்லி தழை வேரை சிறிதளவு கையாலேயே கிள்ளி எடுத்துக் கொண்டு அதில் இருக்கும் ஈரத்தன்மை போகும் படி துடைத்துக் கொள்ள வேண்டும்.
பூஜை அறைக்கு வந்து குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்று வைத்து விட்டு ஒரு தாயத்துக்கு உள்ளே இந்த கொத்தமல்லி வேரை போட்டு கூடவே ஒரு சின்ன துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து கொஞ்சம் விபூதி போட்டு மூடிவிடுங்கள்.
எந்த வகை தாயத்தை பயன்படுத்த வெண்டும்
செம்பு தாயத்து, வெள்ளி தங்கம் என்று எந்த தாயத்தை வேண்டும் என்றாலும் இதற்கு பயன்படுத்தலாம். இதை ஒரு சிவப்பு கயிறில் கட்டி உள்ளங்கையில் வைத்து குலதெய்வத்தின் பெயரை 108 முறை உச்சரித்து கழுத்தில், கைகளில் கட்டி கொள்ளலாம்.ஆனால் இடுப்பில் மட்டும் இந்த தாயத்தை கட்ட கூடாது.
இந்த தாயத்து கழுத்தில் இருந்தால் எந்த கெட்டதும் நெருங்காது. தைரியமாக வெளியே சென்று உங்கள் வேலையை பார்த்துவிட்டு தைரியமாக நல்லபடியாக வீடு திரும்பலாம்.
பெண்கள் தீட்டு காலத்திலும் இந்த தாயத்தை கட்டிக் கொள்ளலாம். மாதவிடாய் காலத்தில் வெளியில் செல்லும்போது காத்து கருப்பு உங்களை அண்டாமல் இருக்கும்.