கைவிட மாட்டோம்; இலங்கைக்கு ஜப்பான் உறுதிமொழி
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி தொடர்ந்தும் இலங்கைக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி (Hideaki Mizukoshi) தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
அத்துடன் இலங்கையுடனான பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை தொடர்ந்து பேணுவதாகவும் ஹிடேகி மிசுகோஷி(Hideaki Mizukoshi) நம்பிக்கை அளித்துள்ளார்.
இதன்போது இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி , தூதுவருக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.
அதேவேளை இலங்கைக்கு தற்போதைய சூழலில் உதவ முடியாது என கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (Hideaki Mizukoshi), தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்பிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.