இலங்கையில் சில பகுதிகளுக்கு நாளைய தினம் நீர்வெட்டு!
இலங்கையில் நீர்வெட்டு குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கண்டியில் சில பகுதிகளில் நாளைய தினம் (20-07-2023) 9 மணிநேர நீர்வெட்டு ஏற்படவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.
மின்சார சபையின் அவசர திருத்த வேலைகள் காரணமாக, கண்டியில் சில பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 9 மணித்தியால நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், கஹவத்த, குருகொட, புளுகஹதென்ன, ஹிராகடுவ, கஹல்ல, தெலும்பு கஹவத்த, நுகவெல, பலனகல, அஸ்கிரிய, வேகிரிய, புதிய பல்லேமுல்ல, பழைய பல்லேமுல்ல, யட்டிஹலகல, கொண்டதெனிய, ரஜபிகில்ல, மெதவல, ஹுலுகம்மன ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.