இரண்டு நாட்கள் பொறுத்திருப்போம் அதற்கு பின்னர்.... கூட்டணி தொடர்பில் திமுகவின் முக்கிய புள்ளி வெளியிட்ட தகவல்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த கட்சியை 108 தொகுதிகளில் மக்கள் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.
ஆனாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 117 எம்.எல்.ஏக்கள் தவெகவிடம் இல்லை. திமுக கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு கொடுத்திருப்பதன் மூலம் தவெகவின் பலம் 112 க உயர்ந்திருக்கிறது.

திமுக, அதிமுக இடையே கூட்டணி
ஆனாலும், இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் இருந்தால் மட்டுமே விஜயால் ஆட்சி அமைக்க முடியும் இந்த காரணத்தைக் காட்டி தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் இதுவரை அழைக்கவில்லை.
தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனிடம், திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "எனக்குத் தெரியாது. தற்போதைக்கு அத்தகைய எண்ணம் எதுவும் இல்லை," என்று கூறினார்.
மேலும், திமுக ஆட்சி அமைக்க முயற்சிக்குமா என்று கேட்கப்பட்டதற்கு, அவர், "ஆளுநர் 10-ஆம் திகதி வரை அவகாசம் அளித்துள்ளார்.
நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விஜயால் ஆட்சி அமைக்க இயலாவிட்டால், நாங்கள் நிலைமையை மறுபரிசீலனை செய்து, எங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்.
த.வெ.க.விடம் 112 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அதன் பிறகுதான் நாம் ஒரு மாற்று வழியைப் பற்றிச் சிந்திக்க முடியும் என்று குறிபிட்டுள்ளார்.