விசுவாசுவ தமிழ் புத்தாண்டில் அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிகள்

Sahana
Report this article
தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத முதல் நாளில் பிறக்கின்றது. புத்தாண்டில் தனிப்பட்ட நிலையிலும் உலக அளவிலும் பல வகையான ஆச்சரியம் அளிக்கும் சம்பவங்கள் நடக்கலாம். விசுவாசுவ புத்தாண்டு மிகவும் சுப பலன்களையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொடுக்கப் போகிறது.
அந்த வகையில், விசுவாசுவ தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி பிறக்க உள்ள நிலையில், இந்த புத்தாண்டு, எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் புத்தாண்டாக இருக்கும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்கு அதிபதியான சுக்கிரன் மிகவும் சுப ஸ்தானத்தில் இருப்பார். உங்கள் பழைய கடனை அடைப்பதில் வெற்றி பெறுவீர்கள். திடீர் வருமான உயர்வையும் காண்பீர்கள். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் எதிரிகள் தோல்வியடைவார்கள். வாழ்க்கையில் சில பெரிய வெற்றிகளை அடைவீர்கள்.
கடக ராசி
கடக ராசியினருக்கு கை வைத்த காரியம் எல்லாம் வெற்றி பெறும். தனியார் வேலை செய்பவர்களுக்கு சூரியனின் தாக்கத்தால் பெரிய வாய்ப்பு கிடைக்கும். அதிகாரமும் பதவியும் பெறுவீர்கள். உங்களுக்குப் புகழும் நிறையப் பணமும் கிடைக்கப் போகிறது. கடந்த சில மாதங்களில் உங்களின் கடின உழைப்பின் பலனை இப்போது பெறுவீர்கள்.
துலாம் ராசி
துலாம் ராசிக்கு சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருப்பார். உங்கள் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள். மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். கடந்த சில நாட்களாக திருமண வாழ்க்கையில் பதற்றம் நிலவி வருகிறது. இப்போது அது முடிவடையும். வருமானத்தை பெருக்குவதில் வெற்றி பெறுவீர்கள்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு வீடு, வாகனம் என ஆடம்பரம் மட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் திடீர் பண ஆதாயமும் கிடைக்கும். வீடு வாங்கும் எண்ணம் இருந்தால் வாங்கலாம். வேலையில் இருப்பவர்களின் செயல்பாடு முன்பை விட சிறப்பாக இருக்கும். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் இந்தக் காலத்தில் சிறப்புப் பலன்களைப் பெறலாம்.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்கள் வேலையில் வெற்றி பெறுவார்கள். உங்கள் பொழுதுபோக்குகள் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாம். இந்த காலகட்டத்தில் துணிச்சலான முடிவுகளால் ஆதாயமடைவீர்கள். தடைபட்ட காரியம் அனைத்தும் நிறைவேறும். பண வரவு மூலம் பொருளதார நிலை உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.