விஜய் மனைவியான ஈழத்தமிழ் பெண்ணாலும் சாதிக்க முடியாமல் போய்விட்டதா..!
தமிழகத்தில் எல்லோராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து விஜய் பேசாது இருந்தது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் மாநாட்டிற்கு முன்னர் பல தர்க்க ரீதியான கருத்தியல்கள் முன்வைக்கப்பட்டாலும் மாநாடு நடந்து முடிந்த பின்னர் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து எவ்வாறு பேசப்பட்டிக்கின்றது என்ற கருத்துக்கள்தான் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
கடந்த காலங்களில் ஈழத்தமிழர்கள் குறித்து பேசாத கட்சி மாநாடுகள் இல்லை என்றே கூறலாம். ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளது.
இது இவ்வாறிருக்க விஜயின் மனைவி ஈழத்தமிழ்ப் பெண். அத்துடன் விஜயின் தந்தையான சந்திரசேகருடைய நிலைப்பாடுகளின் விளைவு விஜயிடம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநாட்டில் விஜயின் உரை ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான விடயங்களை இந்த காணொளி மூலம் காணலாம்....