சுரேஷ் சலே வழக்கு ; நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு
இரண்டாம் இணைப்பு
சுரேஷ் சலேயின் நிலையை பரிசோதிக்க மருத்துவ குழு நியமனம்
தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே, காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா எனப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட விசேட மனநல தடயவியல் மருத்துவ குழுமமொன்றை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நியமித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேனவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மருத்துவ பரிசோதனையை தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையி மேற்கொள்ளுமாறும் அங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, அந்த மருத்துவ அறிக்கையை அடுத்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிவானின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப்படையின் (STF) அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவ பரிசோதனை அறிக்கை பெறுவதற்கான கோரிக்கை
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கில், மருத்துவ பரிசோதனை அறிக்கை பெறுவதற்கான சட்டமா அதிபரின் கோரிக்கை குறித்து இன்று (10) நீதிமன்ற உத்தரவு அறிவிக்கப்படவுள்ளது.
இந்த மனு கடந்த ஜூன் 4ஆம் திகதி பரிசீலிக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் முன்னதாகவே தெரிவித்திருந்தது.