வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய177 வது வருடாந்த திருவிழா!
வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய177 வது வருடாந்த திருவிழாவானது எதிர்வரும் 30.07.2021 (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு கொடியேற்றதுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 08.08.2021 (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலியும் தொடர்ந்து 7.15 மணிக்கு மட்டக்ககளப்பு மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா யோசப் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புகொடுக்ககப்பட்டு திருவிழானது நிறைவுரும்.
நவநாட்காலங்களில் மாலை 5.30 மணிக்கு திருச் செபமாலையும் அதனை தொடர்ந்து திருப்பலியும் இடம்பெரும்.
எதிர்வரும் 06.08.2021 (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு ஆயரின் தலைமையில் திவ்விய நற்கருணை, உறுதிபூசுதல் திருவட்சாதங்கள் வழங்கி வைக்கப்படும்.
இத் திருவிழாவானது சுகாதார அமைச்சினால் அறிவுருத்தப்பட்டிருக்கும் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமையவே இடம்பெறும்.