தரக்குறைவாக பேசிமைக்கு எதிர்ப்பு ; வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் இன்றையதினம் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு மாகாண பிரதம செயலர் தலைமையில் கடந்த ஜூலை மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற துறைசார் மீளாய்வு கூட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசிமைக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
மேலும், இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற சட்ட நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
மேலும், வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இந்தப் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளம் ஆகியன ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.