வவுனியாவில் இளைஞர்கள் குழு அரங்கேற்றிய கொடூரம்... இருவர் வைத்தியசாலையில்!
வவுனியாவில் இளைஞர்கள் குழுவொன்று நாடத்திய தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் இன்றையதினம் (24-06-2024) வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தேக்கவத்தைப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் குழுாய் கிணறு அடிக்கும் தொழில் செய்து வருகின்றார்.
குறித்த இளைஞர் வவுனியா நகரிலிருந்து வீடு சென்ற போது அவரை வழிமறித்த குழு ஒன்று அவர் மீது போத்தல்கள் மற்றும் தடிகாளால் தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும், குறித்த இளைஞனின் வீடட்டிற்குள் நுழைந்து இளைஞனின் தந்தை மீதும் தாதக்குதல் நடத்தியுள்ளது.
காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குழாய் கிணறு அடித்தல் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நபர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளதுடன், அதன் தொடர்ச்சியாக இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதா என்ற கோணத்திலும் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.