வவுனியா வைத்தியசாலையில் அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பியோடிய சந்தேகநபர்!
வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த கைதியொருவர் தப்பியோடியுள்ளமை தொடர்பில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று 31.01.2024 காலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 26.01.2024 அன்று கஞ்சா விற்பனை மற்றும் வைத்திருந்தமை குற்றச்சாட்டில் 28 வயதான இளைஞனை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்தனர்.
பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் குறித்த இளைஞனை ஆயர்படுத்தப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் 29.01.2024 அன்று சிறைச்சாலையில் இளைஞருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்த நிலையிலேயே 31.01.2024 அன்று காலை 6.00 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார்.
தப்பியோடிய குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.