வவுனியாவில் இரவுவேளை கோர விபத்து! ஒருவருக்கு நேர்ந்த சோகம்
வவுனியாவில் கெப் ரகவாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (01) இரவு 7.40 மணியளவில் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா ஊடாக யாழ்.நோக்கி பயணித்த கெப் ரக வாகனமும் எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டியும் தாண்டிக்குளம் இராணுவ சிற்றூண்டிசாலைக்கு அண்மித்த பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவத்தில் முச்சக்கரவண்டி முழுவதும் சேதமடைந்துள்ளதுடன் கெப் ரக வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி 32 வயது மதிக்கத்தக்க ரஐீவன் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.