தமிழர் பகுதியில் துயரச் சம்பவம்: இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பி.எஸ்.வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13-08-2023) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது கல் ஒன்றில் மோட்டார் சைக்கிள் சறுக்கியதில் பின் பக்கத்திலிருந்த பெண் கீழே விழுந்துள்ளார்.
தலைப் பகுதியில் கடும் பாதிப்படைந்த அவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மீராவோடை உதுமான் வித்தியாலயத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரியும் 28 வயதுடைய ஜே. ராஷிதா பர்வின் என்பவராவார்.
விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.