யாழில் அலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்துத் திருடிய நபருக்கு நேர்ந்த கதி!
வாழைச்சேனையில் இருந்து யாழிற்கு வந்து அலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து திருடியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருடிய அலைபேசிகளை விற்பனைக்கு கொடுத்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் – கே.கே.எஸ். வீதியில் சத்திரச்சந்தியிலுள்ள அலைபேசி விற்பனை நிலையத்தில் கடந்த டிசம்பர் 22ஆம் திகதி இரவு திருட்டு இடம்பெற்றது.
மேலும் இதுகுறித்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து விற்பனை நிலையத்தில் பெறப்பட்ட சிசிரிவி பதிவுகளில் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
யாழ்.தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் றில்ரோக் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் (30-12-2021) வாழைச்சேனை சென்று சந்தேக நபரைக் கைது செய்தனர்.
இதேவேளை, சந்தேக நபரிடம் இருந்து திருடப்பட்ட அலைபேசிகளை விற்பனை செய்து கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டதுடன் 6 அலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.