அமெரிக்க அதிபரின் அதிரடி நகர்வு: ராஜபக்ச அரசாங்கத்திற்கு புதிய அதிர்ச்சி
இலங்கை அடுத்தடுத்து கடுமையான நெருக்கடிகளை சந்தித்துவரும் நிலையில் அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடன் (Joe Biden) எடுத்த ஒரு அதிரடியான நகர்வின் மூலம் இலங்கை ஒரு ஜனநாயக விரோத நாடு என்பது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகின் ஜனநாயகம் தொடர்பிலான உச்சிமாநாட்டுக்கு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படாதமை ராஜபக்ச அதிகார மையத்துக்கு புதிய அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த மாதம் 9 - 10 ஆம் திகதிகளில் அமெரிக்காவில் ஜனநாயகத்துக்கான உச்சிமாநாட்டு அல்லது Summit for Democracyc என்ற கருப்பொருளில் ஒரு முக்கியமான மாநாடு அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடனால் நடத்தப்படவுள்ளது.
மேலும், மெய்நிகர் வழியாக இடம்பெற்றவுள்ள இந்த மாநாட்டில் பங்கெடுக்க உலகின் 109 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் இலங்கை புறக்கணிக்கபட்டுள்ளது. இலங்கைக்கு அழைப்பு விடுக்காததன் மூலம் இலங்கை ஒரு ஜனநாயக விரோத நாடு என்பது அனைத்துலக அரங்குக்கு பகிரங்கப்படுத்தபட்டுள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை காவற்துறையினருக்கு பயிற்சி வழங்கும் செயற்திட்டத்தை ஸ்கொட்லாந்து ஸ்கொட்லாந்து காவற்துறை முற்றாக கைவிடப்படுவதாக நேற்று அறிவித்த நிலையிலும், இலங்கை அரசு ஒடுக்குமுறைகளை செய்வதாக பிரித்தானியா தனது பூகோள மனித உரிமை நிலைமை அறிக்கையிடலில் தெரிவிக்கப்பட்ட பின்னணியிலும் இந்த புதிய நகர்வு அமெரிக்காவில் இருந்து வெளிப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு அசிய நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையின் பங்காளி நாடுகளான சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்கா அழைப்பு விடுக்கவில்லை.
குறித்த மாநாட்டுக்கு தாய்வானுக்கு அழைப்பு விடுத்தமைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தமிழர்தரப்பு அண்மைய நாட்களில் பேச்சுக்களை நடத்திய காலகட்டத்துக்கு சமாந்திரமாக சிறிலங்காவுக்குரிய அழைப்பு மறுப்பு வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.