ஈரானின் 44 போர் கப்பல்களை அழித்த அமெரிக்கா! டிரம்ப் எச்சரிக்கை
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதலில் ஈரானின் 44 போர்க்கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதன்படி கடலில் கண்ணிவெடிகளை பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை தாக்கி அழித்ததாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.

16 கண்ணிவெடி பதிக்கும் கப்பல்கள் உட்பட பல ஈரான் கடற்படை கப்பல்
ஹோர்முஸ் நீரிணை அருகே 16 கண்ணிவெடி பதிக்கும் கப்பல்கள் உட்பட பல ஈரான் கடற்படை கப்பல்களை தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவ மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.
அதோடு ஈரானின் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டது.
உலகின் மசகு எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் நடைபெறும் ஹோர்முஸ் நீரிணை கடல் பகுதியில் ஈரான் கண்ணிவெடிகளை வைத்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், தவறினால் முன்பு கண்டிராத அளவில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையில் 16 கண்ணிவெடி படகுகள் அழிக்கப்பட்டுள்ளன.