யாழ் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு இன்று காலை 9 மணிக்கு நிகழ்நிலையில் ஆரம்பமாகியுள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமைகள் காரணமாக பட்டமளிப்பு விழாவில் பெருமளவானோர் ஒன்று கூடுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அதனை நிகழ் நிலையில் நடாத்துவதற்குத் தடை ஏதுமில்லை எனவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் மாணவர்களின் பட்டங்களை உறுதிப்படுத்துவதற்காக இன்று நிகழ்நிலைப் பட்டமளிப்பு நடைபெற்று வருகின்றது. அதன்படி இன்று காலை 9 மணிக்கு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில், கைலாசபதி கலையரங்கில் பட்டமளிப்பு விழா ஆரம்பமானது.
இதேவேளை , நாடு வழமைக்குத் திரும்பியதும் மாணவர்களுக்கான சம்பிரதாய பூர்வ பட்டமளிப்பு விழா நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.