இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் இருந்த தனியார் பல்கலைக்கழகம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட மட்டக்களப்பில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் உத்தியோகபூர்வமாக அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரான முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் இராணுவத்தினர் மட்டக்களப்பு வளாகத்தை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளனர்.
இதுத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹிஸ்புல்லா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய பல்கலைக்கழகம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு வருடங்களாக பல்கலைக்கழகம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கூறிய ஹிஸ்புல்லா, ஈஸ்டர் தாக்குதல்களுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று விசாரணைகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அது மீள கையளிக்கப்பட்டதாகக் கூறினார்.