பிரித்தானிய பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!
பிரித்தானியாவில் இன்று புதன்கிழமை (25-05-2022) முதலீட்டாளர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியதால் முன்னர் இருந்ததை விட பங்குகள் அதிகரித்து காணப்பட்டது.
ப்ளூ-சிப் எப்டிஎஸ் 100 இன்டெஸ் 0.5 விகிதம் அதிகரித்தது. கிளக்கோர் பீஎல்சி 1.5 பில்லியன் பவுண்டுகள் அபராதம் செலுத்தும் என்ற செய்திகள் வந்த நிலையில் அதன் பங்குகள் மதிப்பு 0.3விகிதம் அதிகரித்தது.
எரிசக்தி நிறுவனமான SSE மிகப்பெரிய இலாபத்தை எட்டியதாக அறிவித்த பின்னர் பிஎல்சி பங்குகளின் மதிப்பு 5.7 விகிதம் அதிகரித்தது.
அதேவேளை தனது நிறுவனம் எட்டிய லாபத்தை வெளிநாடுகளின் எரிசக்தியில் தங்கி இருப்பதை குறைக்க செலவு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
மார்க் அண்ட் ஸ்பென்சர் (Marks & Spencer) நிறுவனத்தின் பங்குகள் 4.8 விகிதம் அதிகரித்து காணப்பட்டது.
அதேவேளை நிகழ்நிலை வணிக நிறுவனமான ஒக்காடோவின் பங்குகள் 0.6 விகிதம் உயர்ந்துள்ளது.