பிரித்தானியாவின் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானி!
பிரித்தானியாவில் இன்னும் ஓரிரு நாட்களில் நாளாந்தம் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டக்கூடும் என ZOE கொரோனா ஆய்வு செயலியின் வைத்தியர் கிளாரி ஸ்டீவ்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் நேற்று ஒரே நாளில் 1,80,000 க்கும் மேற்பட்ட நாளாந்தம் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன, இது நாட்டில் இதுவரை ஒரே நாளில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
இதுகுறித்து வைத்தியர் கிளாரி ஸ்டீவ்ஸ் (Claire Steves) கூறியதாவது,
நாட்டில் நாளாந்தம் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே நேரத்தில் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டக்கூடும்.
இதேவேளை, பாதிப்பு எண்ணிக்கையின் அதிவேக வளர்ச்சி நின்றுவிட்டதாகத் தோன்றுகிறது, மேலும் அதிகரிப்பு மிகவும் நிலையானதாக இருக்கிறது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் விகிதங்கள் கடந்த ஆண்டை விட அதிர்ஷ்டவசமாக மிகவும் குறைவாக உள்ளன, ஆனால் அவை குறிப்பாக லண்டனில் அதிகமாக உள்ளன.
சில வாரங்களுக்கு முன்பு இருந்ததை விட குறைவான மக்கள் புதிதாக நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்பது ஒரு நல்ல செய்தியாக இருக்கிறது என டாக்டர் கிளாரி (Claire Steves) ஸ்டீவ்ஸ் தெரிவித்துள்ளார்.