கடன்காரர் தொந்தரவால் உயிரை மாய்த்த குடும்பஸ்தர்
தம்புள்ளை, மகந்தனை பிரதேசத்தில் நபர் ஒருவர் கடன் தவணையை செலுத்த முடியாமல் தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடன்காரர் தொந்தரவு
குறித்த குடும்பஸ்தர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி, மாதம் ரூ.34 ஆயிரம் தருவதாக உறுதியளித்ததாகவும், அதை திருப்பி செலுத்த முடியாமல் மனமுடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தொழில் நடவடிக்கைகளில் ஏற்பட்ட இடையூறு காரணமாக அவரால் கடன் தொகையை செலுத்த முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
பல தவணை கட்ட முடியாததால், கடன் தொகையை அடிக்கடி செலுத்த நிதி நிறுவனமும், கடன் உத்தரவாததாரர்களும் தொந்தரவு செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.