ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி கூறிய உக்ரைன் ஜனாதிபதி!
உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அன்பான வாழ்த்துக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி விளோடிமிர் ஜெலென்ஸ்கி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலியுறுத்தினார்.
அநுர குமார திசாநாயக்கவுக்கு நன்றி கூறுகிறேன்
"உக்ரைனின் சுதந்திர தினத்தன்று அன்பான மற்றும் நேர்மையான வாழ்த்துக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
பரஸ்பர மரியாதை மற்றும் அமைதி, செழிப்புக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பின் அடிப்படையில் இலங்கையுடனான நட்புறவுகள் மற்றும் ஒத்துழைப்பை உக்ரைன் மதிக்கிறது.
இரு நாடுகளுக்கும் நன்மைகளைத் தரும் வகையில், எங்கள் உறவுகள் மேலும் வளர்ச்சியடையும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளன என நாங்கள் நம்புகிறோம்," என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உக்ரைன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், உக்ரேன் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்து, இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.