இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது! வெளியான பிண்ணனி
பொலன்னறுவையில் இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகாரிகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.
இந்த கைது நடவடிக்கை பொலன்னறுவை அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்கு 9,000 ரூபா இலஞ்சம் கோரியதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பொலன்னறுவை பகுதியில் உள்ள முறைப்பாட்டாளரின் வீட்டில் மின்னேரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ளனர்.
சந்தேகநபர்கள் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.