மின்வெட்டு தொடர்பில் இரு அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி!
நாட்டில் கடந்த ஜூன் மாதம் 9-ம் திகதி மின்சார கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட இடையூறு தொடர்பில் மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் (05-07-2022) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த தினத்தில் மின்சார உற்பத்திக்கான போதுமான நீர் இருந்தபோதும், டீசலைக் கொண்டே மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் அனுமதியின்றி மின்சார விநியோகத்தில் தடையும் மேற்கொள்ளப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இரண்டு பொறியியலாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.