மீகொடை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது
மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் வர்த்தகர் உட்பட இருவர் நேற்று சனிக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவத்துக்குப் பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை மறைத்து வைத்திருந்த உணவகத்தின் உரிமையாளரையும், சந்தேக நபர்களுக்குத் தங்குவதற்கு உதவிய சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 39 மற்றும் 44 வயதுடைய இம்புல்கம மற்றும் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மீகொடை பொருளாதார நிலையத்தில் மொத்த விற்பனை கடையொன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் கடந்த 12ஆம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .